நிக்கிஃபோரஸ் வ்ரேட்டகோஸ்
Nikiforos Vrettakos
“And your country , when you hold it dear in your heart, is everywhere.
Your constellation, from that height, does not see Mt.Taygetos.
It sees Earth.”

ஃவ்ரெட்டகோஸ் இயல்பாய் பிரவாகிக்கும் கவிதை வரிகளை ஓரு தூய பாடும் குரலாய்,வடிவத்திற்கு பிராதான கவனம் செலுத்தாமல் எழுதுபவர். கிரேக்கத்தின் நவீன கவிஞர்களுள் முக்கியமானவர். ஆனல் நோபல் பரிசு பெற்ற சக கிரேக்க கவிஞரான ஓஸியஸ் எலிடிஸ் அளவிற்கு ஆங்கில இலக்கிய உலகில் பிரபல்யம் அடையாதவர்.
ஸ்பார்ட்டா நகருக்கு அருகில் உள்ள நகரான க்ரோகியாஸ் என்ற ஊரில் ஜனவரி 1, 1911-ல் பிறந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக ஏதென்ஸ் சர்வகலாசாலையில் சேர்ந்த ஓரு வருடத்திலேயே படிப்பை வட்டுவிட்டார். அதே ஆண்டில் அவரது முதல் கவிதைத் தொகுப்பு (“Under Shadows and Lights” ) வெளியானது.
1967-ல் தனது அரசியல் நிலைபாடு காரணமாக ஏதென்ஸை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்துக்கு;ச சென்ற வ்ரெட்டகோஸ், 1974-ல் மீண்டும் க்ரீஸ் நகருககுத் திரும்பினார். இரண்டு முறை =State Prize for Poetry’ விருதைப் பெற்றார். கவிதைத் தொகுப்புகள் உட்பட பல புத்தகங்களின் ஆசிரியர். நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். கவிதைகளுக்காக தனது தேசத்தின் பல விருதுகள் வழங்கப்பெற்றவர்.
உலகை மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இவருடைய கவிதைகளில் அறநெறிச் செய்திகளைச் சொல்லக் கட்டாயப்படுத்துகிறது. 1991 ஆகஸ்ட் 4 அன்று உயிர்நீத்த, சமாதானத்திற்கும் நேசத்திற்குமான கவிஞராக அறியப்படும் வ்ரெட்டகோஸ், “கிரேக்க கவிதைகளின் புனிதர்” என்றழைக்கப்படுகிறார்.
நீயின்றி புறாக்கள்
நீயின்றி புறாக்கள்
நீரைக் கண்டுபிடித்திருக்க முடியாது.
நீயின்றி இறைவன் தன்
நீரூற்றுக்களில் ஓளியேற்றியிருக்க முடியாது.
ஓரு ஆப்பிள் மரம் தூவுகிறது தன் மலர்களைக்
காற்றில்; உன் அங்கியில்
வானினின்று நீர் கொணர்கிறாய் நீ,
கோதுமைத்தாள்களின் ஓளிர்வு,மற்றும் உன் மீது
சிட்டுக்குருவிகளாலான ஓரு நிலவு.
வார்த்தைகளின் களம்
காட்டுப்பூ ஓன்றைச் சுற்றும்
தேனீயைப் போல்தான் நானும். சுற்றித்திரிகிறேன் நான் ஓய்வின்றி வார்த்தைகளைச் சுற்றி.
இந்தக் குரலை வார்த்த நீண்ட தொடர்வரிசை முன்னோர்களுக்கு நன்றியுரைக்கிறேன்.
இணைப்புகளாய் தறித்து அர்த்தங்களை ஆக்கினர் அவர்கள். கொல்லர்கள் போல் அவர்கள் வார்த்தனர் பொன்னாக அவற்றை, ஆயின அவை ஹோமர்,அக்கிலஸ்,மறைநூல்கள் மற்றும் பிற அணிகலன்களாக.”
வார்த்தைகளின் சரடுகளோடு,
-என் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும்
இந்த பொன்னிலிருந்து வரும் பொன்-
நான் இணைக்கப்பட்டிருக்கிறேன், பங்கெடுக்கிறேன்
இவ்வுலகில்.
கவனம் கொள்வீர்:
நான் சொன்னேன்,எழுதினேன்,நான் “நேசிக்கிறேன்.”
மொழிபெயர்ப்பு: மர்ஜோரி சேம்பர்ஸ்.
ஆக்கங்களனைத்திலும் பரிசுத்தமானது
அதெப்படியோ சற்றும் இருள் மிஞ்சவில்லை.
ஊறவைத்திருக்கிறேன் சூரிய ஓளியை ஓராயிரம்
காயங்களூடாக,
உன்னைச் சுற்றி நானிப்போது போர்த்தியிருக்கும் இந்த வெண்மையை உன்னால் ஆல்ப்ஸில்கூடக்
காணவியலாது:இக்காற்று சுழல்கிறது அவ்வுயரத்திலும்கூட கறைபடுத்துகிறது பனியை.
வெண்ரோஜாக்களிலும்கூட புழுதியின் சுவடிருக்கிறது.
துல்லியமான அற்புதம் நமக்குள்தான் இருக்கிறது:
விரிந்துபரந்த இவ்வெண் அகலிடம் மெய்யாகவே ஓளிர்கிறது இப்பிரபஞ்சம் மீதாக. படைப்புகளனைத்திலும் பரிசுத்தமானது வைகறை மெல்லொளியன்று,
நதி பிரதிபலிக்கும் வானமுமன்று,
ஆப்பிள் மலர்மொட்டுகள் மீதான சூரியனும் அன்று.
அது நேசம்.
கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு: ஜோன் கொரெலிஸ்
காலை நேர வானம்பாடி
என் வீர்யம் ஓரு நீல விசைப்பொழிவாய் வெடிக்கிறது
என் இரத்தநாளங்களனைத்தும் என் குரலில் ஒடுகின்றன.
என் இரத்தம் கொப்புளிக்கின்றது மௌனத்தில், புதர்களில் சிள்வண்டுகள் போல,
தன் துளிகளை என்றுமே கணக்கில் கொள்ளாத நதி போல,
ஒர் அற்புதம் போல அல்லது கடல் நோக்கி இறங்கும் ஓரு போதை முத்தம் போல.
திருவிழாக்காலக் கூட்டுச்சந்தியில் உலகம் சுறுசுறுப்பாக எனக்கு மேல்.
ஊதா,ரோஜா,வெள்ளை மற்றும்நீல நதிகள்
கம்பிவாத்தியக் கருவிகளுக்கு மத்தியில் புரள்கின்றன. சூழல் ஜ்வலிக்கின்றது.
தன் ஓளியின் இதயத்திலிருந்து,தன் தேவதைகளனைவரின் வாய் மூலமாய்க் கேட்கிற,
இறைவனின் நட்புச் செய்தியை உற்றுக் கேட்கிறேன் வாயடைத்துப்போய்.
பொங்கித் ததும்புகையில் வானம்பாடியையொத்த என் உத்வேக ஓழுக்கை
நீலமாக்கும் கடவுளின் ஓளியாலேயே பதிலுரைக்கிறேன் நான்.
சூரிய ஓளிக்கும் அன்பின் ஓளிக்கும் மத்தியிலிருக்கும் நட்சத்திரம்போல,
அவரது சாளரத்தின் உயரிய மரத்தில் சிறகடித்து
நான் காலையொளியைக் கொத்துகிறேன்;
அவருக்கு பதிலுரைக்கிறேன் பட்சிகள் போல சீட்டியடித்து,வார்த்தைகளின்றி.
ஏகாந்தம் இல்லை
மனிதன் தோண்டிக்கொண்டிருக்கும் அல்லது சீட்டியடித்துக் கொண்டிருக்கும்
அல்லது கைகளைக் கழுவிக்கொண்டிருக்கும்
இடத்தில் ஏகாந்தமில்லை.
மரம் தன் இலைகளை அசைக்குமிடத்தில் ஏகாந்தமில்லை. பெயரறியாப் பூச்சி அமருமிடத்தில்,
நட்சத்திரத்தை பிரதிபலிக்கும் சிற்றோடையிருக்குமிடத்தில்
உறங்கும் சிறுகுழந்தைத் தன் திறந்த சந்தோஷ
சிற்றிதழ்களால்
தன் தாயின் முலையைப் பற்றிக்கொண்டிருக்கும்
இடத்தில் ஏகாந்தமில்லை.
தமிழில்:தேஜு க்ருஷ்ணா

ஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா

ஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா